உலகம் முழுவதும் கொரோனாவால் 27,365 பேர் சாவு.. 6 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு...

உலகம் முழுவதும் 5 லட்சத்து 97,262 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. 27,365 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே போல், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகமாக பரவியுள்ளது.

இன்று(மார்ச்28) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 லட்சத்து 97,262 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 27,365 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 33,363 பேர் இந்நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 23,559 பேருக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.இந்தியாவில் நேற்று வரை 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி, 854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

More News >>