அசுர நடிகையின் தாராளம்..

திருநங்கைகளுக்கு நிதியுதவி..

மலையாள நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகைகளில் பார்வதி போல் வித்தியாசமான சிந்தனை கொண்டவர். கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன.ஆனால் திருநங்கைகளுக்கு உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை.

நடிகை மஞ்சு வாரியருக்கு இதுபற்றி தெரிந்ததும் அவர்களின் பசியைப் புரிந்து கொண்டு உணவுக்காக ரூ 35 ஆயிரம் வழங்கி உள்ளார். மஞ்சுவாரியர் நிதி அளித்த உதவியதற்குத் திருநங்கை அமைப்பினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஏற்கெனவே இவர் பெப்சி தொழிலாளர்களுக்காக 5 லட்சம் வழங்கினார்.

More News >>