ராதிகா ஆப்தேவுக்கு கொரோனாவா?

மருத்துவமனையில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி..

தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே. ரஜினிக்கு ஜோடியாகக் கபாலி, கார்த்திக்கு ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்தவர் கடைசியாக சித்திரம் பேசுதடி 2ம் பாகத்தில் நடித்திருந்தார். தமிழில் படங்களைக் குறைத்துக்கொண்டு இந்தி, ஆங்கில படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.பிரிட்டிஷ் ஆங்கில படங்களில் நடிப்பதால் அடிக்கடி லண்டன் சென்று வருகிறார் ராதிகா ஆப்தே.

கொரேனா பாதிப்புக்கு பிறகும் அவர் லண்டன் சென்று மும்பை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வழிமறித்த அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். பின்னர் தனிமையில் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று அட்வைஸ் தந்தனர். அதை ஏற்று ராதிகா ஆப்தே மருத்துவமனை ஒன்றில் தனி அறை எடுத்து தங்கினார். மருத்துவமனையில் தங்கியிருக்கும் ராதிகா ஆப்தே முககவசம் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுசரி ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கெல்லாம் யாரும் பதில் சொல்லவில்லை.ராதிகா ஆப்தேவோ, 'பாதுகாப்பாக தனியாக இருங்கள்' என்று ஒரு வார்த்தை மட்டும் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

More News >>