கொரோனா தடுப்பு பணி.. மாவட்டச் செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்..

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய மு.க.ஸ்டாலின், கொரோனா பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விசாரித்து அறிந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் திமுக மாவட்டச் செயலாளர்களிடம் செல்போனில் காணொளி கால் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்றும், திமுக சார்பில் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். வெளிமாநிலத் தொழிலாளர் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், அவர் வெளியிட்ட பதிவில், கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம்! மக்கள் செயலாளர்களாகச் செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை கூறினேன்! கொரோனா காலத்தில் திமுக சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்தேன் என்று கூறியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

More News >>