கொரோனாவை பரப்புவது யார் தெரியுமா? பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு..

கொரோனா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர். கொரோனா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரோனவை பரப்பியது சீனா நாடுதான் என்று அமெரிக்க நாளிதழ் ஒன்று சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் எப்படிக் கொந்தளித்திருக்கிறார் பாருங்கள்.

'கொரோனா வைரஸ் தானாகப் பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். குழந்தைகள் எதிர்காலம் பற்றிச் சிந்தியுங்கள். நான் எனது மகனோடு வீட்டில் நேரத்தைக் கழிக்கிறேன்' என கொரோனா தொற்றைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றித் தெரியும் மக்களை வெளுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

More News >>