திரௌபதி சர்ச்சை இயக்குனர் படத்தில் சிம்பு? பதில் சொன்ன டைரக்டர்..

சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் சர்ச்சைக்குள்ளான படம் திரௌபதி. இப்படத்தை மோகன் இயக்கியிருந்தார்.அஜீத்தின் மச்சானும், ஷாலினியின் சகோதருமான ரிச்சர்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.ஆணவக்கொலை பற்றிய கதையாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும் வசதி படைத்த பெண்களை சில இளைஞர்கள் எப்படி மயக்குகிறார்கள். அதை வைத்து அப்பெண்களின் பெற்றோரை மிரட்டி எப்படி சொத்தை பறிக்கிறார்கள் என்பதை மையாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருந்தது. படமும் திரைக்கு வந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் தனது அடுத்த படத்திலும் ரிச்சர்ட்தான் ஹீரோ என்று இயக்குனர் மோகன் அறிவித்திருக்கிறார். 'நீங்களும் சிம்புவும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும்' என்று அவரிடம் ஒருவர் கேட்க, 'சிம்பு ரெடி என்றால் நான் ரெடி. எனது அடுத்தப்படத்தை முடித்துவிட்டுத்தான் அவரிடம் பேசுவேன்' என்றார். தனது இயக்கத்தில் அஜீத்தை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம் மோகன்.

More News >>