நர்ஸ் வேலைக்குப் போகாதது ஏன்? ஜல்லிக்கட்டு நடிகை ஜூலி பதில்..

பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி முன்னதாக மருத்துவ மனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றினார். ஜல்லிக் கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷம் போட்டுப் பிரபலமானவர். பிக்பாஸில் பங்கேற்ற பிறகு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தற்போது கொரொனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கிறார். எப்போதும் இணைய தளத்தில் பிஸியாக இருக்கும் அவர் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். ஒரு ரசிகர், நீங்கள் ஏன் நர்ஸாக பணியாற்றவில்லை என்று கேட்டார். அதற்குப் பதில் அளித்தார்.ஜூலி கூறும்போது,எல்லோரும் இதையே கேட்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை. நான் தற்போது நடித்து வருகிறேன். நர்ஸ் பணி என்பது பகுதி நேரமாகச் செய்யும் பணி கிடையாது. முழு நேரமும் ஈடுபாடுடன் செய்ய வேண்டும். படப் பிடிப்புக்குச் சென்றுவிட்டு பணிக்குச் செல்வது முடியாத காரியம். ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்ய முடியாது. சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளைக் காத்திருக்க வைக்க முடியாது என்றார்.

More News >>