நடிகை டாப்ஸி கழுத்தில் வரைந்த டாட்டூ.. படத்தில் வந்தது நிஜமானது..
நடிகை டாப்ஸி நடித்த இந்தி படம் பிங்க். அமிதாப்பச்சன் பிரதான ரோலில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழில் அஜீத் நடிக்க, நேர் கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தில் பறவைகள் வரிசையாகப் பறப்பது போல் டாட்டூ வரைந்திருப்பார். அதுபற்றி தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது: பிங்க் இந்தி படத்தில் மினல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் வரிசையாக பறவைகள் பறப்பதுபோல் டாட்டூ வரைந்திருந்தேன். பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல் அவளும் சுதந்திரமாகப் பறக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாபாத்திரம் என்பதை உணர்த்துவதுதான் அதற்கான அர்த்தம். படம் வெளியான பிறகு பல பெண்கள் அதேபோல் டாட்டூ வரைந்திருந்தனர். நானும் டாட்டூ பிரியை தான். ஏற்கெனவே 2 டாட்டூ வரைந்திருக்கிறேன். படத்தில் தற்காலிகமாக வரைந்துகொண்ட டாட்டூவை தற்போது நிரந்தரமாக என் கழுத்தில் வரைந்திருக்கிறேன் என்றார்.