5000 குடும்பத்துக்கு மளிகை பொருள் தந்த தயாரிப்பாளர்..

ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்துள்ளார் எஸ். தணிகைவேல். இவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் சார்பில் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரண மாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியவர்கள் வருமானமின்றி உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5000 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கினார்.

திருவண்ணாமலை நகரில் தியாகி அண்ணாமலை நகர், கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டிடத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகள் நகர், வேங்கிக் கால், மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு எஸ் தணிகைவேல் ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்க முன்வந்தார்.

வீடு வீடாக இந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச ரேஷன் பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் அளிக்கப்பட்டது.

More News >>