கண்ணுக்குத் தெரியாத எதிரி.. யாரைச் சொல்கிறார் ஏ. ஆர். ரஹ்மான் ..

இசை அமைப்பாளர் ஏ . ஆர் ரஹ்மான் இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு :இந்த பதிவு உயிரையும் பணயம் வைத்து கொரோனா பாத்தித்தவர்களுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவாகும். சுயநலமில்லாமல் துணிச்சலாக பணியாற்றும் அவர்களது செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நமது வேற்றுமைகளை மறந்து கண்ணுக்குத் தெரியாத எதிரியை ஒன்றாகச் சேர்ந்து போராட வேண்டிய நேரம்.உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கும் அந்த கொடியவனை மனிதாபிமானத்தாலும், ஆமிகத்தாலும் வெல்ல வேண்டும். கடவுள் நம் உள்ளத்துள் இருக்கிறான். வழிபட்டு தலங்களுக்குச் செல்ல வேண்டிய நேரமும் இது கிடையாது. அரசின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். தனிமைப்படுத்துதல் அவசியம். சிலவார தனிமை பல வருட வாய்ப்பை தரும். இந்த கொரோனா வைரஸ் எச்சரிக்கை கொடுத்துவிட்டு வருவதில்லை. வைரஸை மற்றவர்களுக்குப் பரப்பாதீர்கள். நமக்குத் தொற்று இல்லை என்று உதாசீனமாக இருக்காதீர்கள். வதந்திகளை யாரிடமும் பரப்பாதீர்கள்.

இவ்வாறு ஏ. ஆர். ரஹமான் கூறி உள்ளார்

More News >>