அஜீத் நடிகைக்கு கொரோனா பாதிப்பா? என்ன நடந்தது?

அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் சமீபத்தில் விமானம் மூலம் பெங்களூர் சென்றபோது அதே விமானத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவரும் சென்றதாகவும். இதையடுத்து ஷ்ரத்தாவை பரிசோதித்த அதிகாரிகள் அவரை தனிமையில் இருக்கக் கேட்டுக் கொண்டதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த ஷ்ரத்தா விளக்கம் அளித்தார். அவர் கூறும் போது,'நான் பயணம் செய்த விமானத்தில் கொரோனா தொற்று பாதித்தவர் யாரும் வரவில்லை. என் வீட்டுக்கு அதிகாரிகள் யாரும் வந்து என்னைச் சோதிக்கவில்லை. நானே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றேன். அதன் பிறகு 14 நாட்கள் தனிமையிலிருந்தேன். அந்த காலமும் முடிந்துவிட்டது. இப்போது என் அம்மாவுக்குச் சமையல் அறையில் ஒத்தாசையாக இருக்கிறேன்' என்றார்.

More News >>