பாரதிராஜா வழங்கிய கையுறை, முகமூடி.. டாக்டர், போலீசார் மாநகராட்சியினருக்கு..

டாக்டர்கள், போலீசார், மாநகராட்சி ஊழியர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா முகமூடி, கையுறை அனுப்பி வைத்தார். இது பற்றி அவர் கூறியதாவது :

உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட் படுத்தாது, இந்த கொடிய நோயின் பரவலைத் திறம்படக் கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது.நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளேன்.

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

More News >>