விளக்கு ஏற்றுவதா? பயமாக இருக்கிறது பிரதமர் உரையால் இயக்குனர் திகில்..

பிரதமர் மோடி இன்று காலை பேசும்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் ஒன்றாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த ஏப்ரல் 5ம் தேதி 9மணிக்கு விளக்கு அல்லது செல்போனில் டார்ச்சர் லைட் காட்டச் சொன்னார்.

இது குறித்து ஆடை, மேயாதமான் படங்களை இயக்கிய ரத்னகுமார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில் 'வாசலில் நின்று கை தட்டச் சொன்னதுக்குத் தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பைப் பற்ற வைக்கக் கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ரத்தினகுமாரின் ட்வீட்டிற்கு மீம்ஸ்கள்மூலம் ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

More News >>