கிரிக்கெட் வீரர் ஆசையால் மீண்டும் டிவிக்கு வரும் சந்தானம்.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி

கொரோனா வைரஸ் ஊரடங்கு மக்களை வீட்டுக்குள் முடக்கியிருக்கிறது. அவர்களது பொழுதுபோக்கு டிவியும். இணையதள கேம் மட்டுமே என்றாகி விட்டது. டிவி ஷூட்டிங்கும் இல்லாததால் பழைய நிகழ்ச்சிகளை ரிபீட் செய்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் வெளியாகி வரவேற்பு பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிமொழிந்திருந்தார். அவரது ஆசை நிறைவேறியிருக்கிறது.

லொள்ளு சபா நிகழ்ச்சி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருப்பதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. அதற்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின், குமுதா ஹேப்ப்பி அண்ணாச்சி என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

More News >>