ரன்பீர் கபூர் அலியாபட் டிசம்பரில் திருமணம்.. 4 நாள் கொண்டாட்டமாக நடத்தத் திட்டம்..
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் இருவரும் காதலிக்கின்றனர். பிம்மாஸ்த்ரா என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு அலியாவின் தந்தை டைரக்டர் மகேஷ்பட். ரன்பீரின் தந்தை பாபி படப் புகழ் ரிஷிகபூர் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
இதுகுறித்து மும்பை பத்திரிகைக்குத் திருமணத்தை நடத்தவிருக்கும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்று அளித்துள்ள பேட்டியில்,ரன்பீர், அலியாபட் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கிறது, டிசம்பர் 21 ம் தேஎதி திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. கிறிஸ்துமஸ் வரை சுமார் 4 நாட்கள் கொண்டாட்டங்கள் நடக்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.