மோடி யோசனை சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட கிளைமாக்ஸா? விளக்கு, டார்ச் லைட் ஏற்றும் கோரிக்கை.

கொரொனாவில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாளை 5ம் தேதிஇருவு 9 மணிக்கு மின் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கு அல்லது டார்ச் விளக்கை 9 நிமிடம் காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து ஜெயம் பட இயக்குனர் மோகன்ராஜா கூறும்போது,வேலைக்காரன் பட கிளைமாக்ஸில் தனக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக அனைவரும் செல்போன் விளக்கை எரிய விடவேண்டும் என்று சிவகார்த்திகேயன் சொல்வார். அதேபோல் கொரொனா போரில் நம் ஒற்றுமையை வலியுறுத்த மக்கள் 5ம் தேதி விளக்கு ஒளியை மாடி அல்லது பால்கனியிலிருந்து காட்ட வேண்டும் என்று பிரதமர் கேட்டிருக்கிறார். நமக்கு உடனடியாக நேர்மறை எண்ணம் தேவை என்பதை வலியுறுத்தி பிரதமர் இந்த கோரிக்கையைத் தெரிவித்திருக்கிறார். கொரொனாவுக்கு முடிவு காட்டுவதில் நம்பிக்கையுடன் இருக்கும் நமது செயல்பாட்டுக்கு விரைவில் பலன் கிடைக்கும் என்றார்.

More News >>