மோடி விளக்கு யுக்தி, கமல் கேள்வி.. என்றோ டார்ச் கையில் எடுத்தாகிவிட்டது..

பிரதமர் மோடி 5ம் தேதி விளக்கு ஏற்ற சொல்லி மக்களுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். கொரொனாவிலும் ஒற்றுமையாக வீட்டில் இருக்கிறோம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த ஐடியாவை மோடி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக் கவசங்கள் தட்டுபாடுக்கான தீர்வு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி வினியோகம், ஏழைகளின் வாழ்வாதாரம். வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்சுக்கே அவர் இன்று தான் வருகிறார்.இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

More News >>