விஜய்யின் மக்கள் இயக்கம் 150 குடும்பத்துக்கு உதவி.. கொரொனா சேவை..

விஜய்யின் அறிவுரையின் பெயரில் புதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன், பொருளாளர் பொன்முடி, துணைச் செயலாளர் மோரிஸ் தொகுதி தலைவர்கள் முத்தியால் பேட்டை ராமு, ராஜ்பவன் பிரதீபன், உழவர்கரை ராஜசேகர், லாஸ்பேட்டை சரவணன், உப்பளம் முனியன், இளைஞர் அணித் தலைவர்கள் உருளையன்பேட்டை பிரான்சில், நெல்லித் தோப்பு செந்தில், கதிர்காமம் அருள் பாண்டி, காலாகப்பட்டு மனோ தொகுதி நிர்வாகிகள் புதியவன், விஜய், அசோக், ஆனந்த், வினோத், சந்துரு, ஜோசப் ,சதீஷ், வசந்த, தினேஷ் ,சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More News >>