இந்தியப் பொருளை வாங்க காஜல் அகர்வால் சிபாரிசு.. கோடை சுற்றுலாவுக்கும் சூப்பர் ஐடியா..

நடிகை காஜல் அகர்வால் பிரதமர் மோடியின் வேண்டுகோள் படி எல்லோரையும்போல் நேற்று இரவு 9 மணிக்கு வீட்டில் அகல் விளக்கு ஏற்றினார். பின்னர் இந்திய வியாபாரிகள் நேரக் கட்டுப்பட்டால் பொருட்களை விற்க முடியாமல் திண்டாடுகின்றனர். அவர்கள் நஷ்டம் அடையாமல் இருக்க ஐடியா சொல்லியிருக்கிறார்.

அவர் கூறியது : கொரோனா பாதிப்பால் இந்திய வியா பாரிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நம்மால் சிறிய அளவில் உதவ முடியும். இம்முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துவிட்டு நம் நாட்டிலேயே சுற்றுலா செல்வோம். நம் ஊர் உணவகங்களில் சாப்பிடுவோம். நம் இந்திய உடைகளை வாங்குவோம். இப்படிச் செய்வதால் நம் வியா பாரிகளுக்கு உதவியது போலவும் அவர்களும் சொந்தக்காலில் நிற்கவும் உதவியாக இருப்போம் ' எனத் தெரிவித்துள்ளார்.

More News >>