நித்யாமேனன் எழுதும் கதை, திரைக்கதை.. ஊரடங்கைச் சாதகமாக்கிய நடிகை..

மெர்சல், வெப்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நித்யா மேனன். இவர் கொரோனா தொற்று ஊரடங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.அவர் கூறும்போது, 'கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் கதையை எழுத நேரம் கிடைத்திருக்கிறது.

படப்பிடிப்புகளில் பங்கேற்ற போது நினைத்தாலும் எழுத நேரம் கிடைக்காது. தடை முடிவதற்குள் கதையை எழுதி முடித்துவிடுவேன். படப்பிடிப்பு தொடங்கியவுடன் மீண்டும் இயந்திர வாழ்க்கை தொடங்கிவிடும்' என்றார். நடிகை நித்யா மேனனுக்கு படம் இயக்கும் ஆசை உள்ளது. அதற்கு தற்போது எழுதும் திரைக்கதையுடன் எழுதி வரும் கதையைப் பயன்படுத்துவார் என்று தெரிகிறது.

More News >>