மோடிக்குக் கடிதம் எழுதிய கமலுக்கு பிக்பாஸ் நடிகை எதிர்ப்பு.. சீனா அதிபருக்கு லெட்டர் எழுதுங்கள்..

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு நேற்று மனம் திறந்து கடிதம் எழுதினார். அதில், 'கொரோனா வைரஸுக்கு ஊரடங்கு பிறப்பித்ததில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணமதிப்பிழப்பில் பொருளாதாரத்தை தொலைத்த ஏழைகள் தற்போது தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். உங்கள் நடவடிக்கை தோற்று விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்துக்கு நடிகையும் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான காயத்ரி காட்டமாக பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, 'நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்ற கடிதத்தை சீனா அதிபர் ஜின் பிங்கிற்கு அல்லது தப்லீஜி ஜமாத்திற்கு எழுதி இருக்கலாம் அல்லது தமிழக முதல்வர், அமைச்சர் விஜய பாஸ்கருக்குக் கடிதம் எழுதி இருக்கலாம். அல்லது விதி முறைகளுக்குக் கட்டுப்படாத மக்களுக்குக் கடிதம் எழுதியிருக்கலாம் ' எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

More News >>