தல அஜீத் பெப்சிக்கு ரூ. 25 லட்சம் நிதி.. மத்திய, மாநில அரசுக்கு தலா ரூ 50லட்சம்..
கொரோனா பாதிப்பால் திரைப்பட தொழில் முடங்கி உள்ளதால் பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கமல், ரஜினி, சூர்யா கார்த்தி, ரோஜா, நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நிதி மற்றும் அரிசி வழங்கினர்.
தற்போது தல அஜீத் தனது சார்பில் பெப்சிக்கு 25 லட்சம் நிதி அளித்திருக்கிறார். இது தவிரப் பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதல்வர் நிவாரண நிதியாக தலா 50லட்சம் வழங்கியிருக்கிறார்.