25 ஆயிரம் சினிமா தொழிலாளர்கள் கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் செலுத்திய ஹீரோ .. இது முதல் தவணை தான் 2வது தவணை தயார்..

கொரோனா லாக்டவுன் திரைப்பட தொழிலைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தென்னிந்தியத் திரையுலகில் 25ஆயிரம் தொழிலாளர்கள் இருப்பதுபோல் வட இந்தியாவிலும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அங்கும் படப்பிடிப்பு நடக்காததால் நடிகர், நடிகைகள் தொழிலாளர்களுக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கிலும் தலா 3 ஆயிரம் ரூபாய் நிதி செலுத்தி இருக்கிறார். இது முதல் தவணை தான் ஊரடங்கு தொடர்ந்தால் 2வது தவணை தயாராக உள்ளது எனத் தெரிவித்திருக்கிறார் சல்மான்.

More News >>