பிகிலுக்கு பிறகு அடுத்த படம் இயக்க காத்திருக்கும் அட்லி.. பெப்சிக்கு ரூ. 10 லட்சம் நிதி..

விஜய்யின் பிகில் படத்தை இயக்கிய அட்லி அடுத்து ஷாருக்கான் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது, அதற்கு ஏற்றார் போல் ஷாருக்கானை மும்பை சென்று நேரில் பார்த்துக் கதை சொன்னார். ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டில் ஷாருக்கான் திருத்தங்கள் சொல்லி கால்ஷீட் தருவதைத் தள்ளிப்போட்டதுடன் வேறு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் பிகில் 2ம் பாகம் இயக்குவது பற்றியும் பரிசீலிப்பதாக ரசிகர் ஒருவருக்கு அட்லி பதில் அளித்திருந்தார். எந்த படத்தை முதலில் இயக்குவார் என்பது பற்றி அட்லி தரப்பிலிருந்து தகவல் எதுவும் வரவில்லை.அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணியில் அட்லி மும்முரமாக இருக்கிறார். இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக சினிமா படப் பிடிப்புகள் முடங்கியிருப்பதால் பெப்சி தொழிலாளர் அமைப்பினருக்கு நடிகர், நடிகைகள் உதவி வருகின்றனர். அட்லி தனது சார்பில் 10 லட்சம் நிதி அளித்திருக்கிறார்.

More News >>