திரிஷா விலகியது பற்றி சிரஞ்சீவி விளக்கம்.. மணிரத்னம் படம் காரணமாம்..

நடிகை திரிஷா தமிழில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் உள்பட நிறையப் படங்கள் கையில் வைத்திருக்கிறார், இதற்கிடையில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து திரிஷா விலகினார். தான் விலகியதற்குக் காரணம் படத் தரப்பு தனது கதாபாத்திரத்தைச் சொன்னதுபோல் எடுக்காமல் காட்சிகளை மாற்றியதாகக் கூறினார், திரிஷா விலகிய பிறகு அந்த கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திரிஷா விலகியது பற்றி சிரஞ்சீவி தற்போது பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, ஆச்சார்யா படத்திலிருந்து திரிஷா விலகியது பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இது பற்றி படகுழுவினரிடம் விசாரித்தேன். எந்த பிரச்சனையும் இல்லை என்றனர். என் மகள் கூட திரிஷாவின் காஸ்டியூமை தயாராக வைத்திருந்தார், பின்னர் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடிக்கிறார். அதற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருப்பதால் ஆச்சார்யா படத்திலிருந்து விலகிவிட்டார். என்பது தெரிய வந்தது என்றார்.

More News >>