சினிமாவை விட்டு விலகுகிறாரா விக்ரம்? ரசிகர்கள் அதிர்ச்சி..

சேது சூப்பர் ஹிட் படத்திற்கு முன்பாக சியான் விக்ரமின் 10 வருடத்திற்கும் மேலான கடின உழைப்பு இருக்கிறது. சேதுவுக்குப் பிறகு அவரது ரேன்ஞ் அளவிட முடியாதளவுக்கு உயர்ந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும் தன்னை வருத்திக்கொண்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார். தற்போது கோப்ரா படத்தில் 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் 8 கெட்டப்பில் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம், வர்மா என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில் மகனின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதற்காக சினிமாவை விட்டு விக்ரம் விலகப்போவதாகத் தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த செய்தி குறித்து விக்ரம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப் பட்டிருக்கிறது. சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது. விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்திலும், அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித் படத்திலும் நடிக்கிறார். மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் விக்ரம். இங்கு குறிப்பிடப்பட்டது அவர் நடிக்கும் படங்களில் ஒரு சிலது மட்டுமே. எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்த்து வெளியிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

More News >>