ஊர் சுற்றியவர்களிடம் வசூலித்த அபராதம் ரூ.54 லட்சமானது..

தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களிடம் இது வரை 53 லட்சத்து 72,044 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 1.19 லட்சம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சீன வைரஸ் கொரோனா உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 7447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி மக்கள் ஆங்காங்கே வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்துத் திருப்பி அனுப்புகின்றனர். தொடர்ந்து ஊர் சுற்றும் இளைஞர்களிடம் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கின்றனர்.இந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகம் முழுவதும் இது வரை ஒரு லட்சத்து 40,176 ஊரடங்கு விதிமீறல்கள் நடந்திருக்கிறது. ஒரு லட்சத்து 51,151 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வரை ஒரு லட்சத்து 40,176 வழக்குகள் பதிவாகியுள்ளன. விதிகளை மீறியவர்களிடம் இருந்து மொத்தம் 53 லட்சத்து 72,044 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

More News >>