தேசியக் கொடியில் எச் சி கியூ மாத்திரையைப் பறக்கவிட்ட பார்த்திபன்..
கொரோனா பாதிப்பு அமெரிக்காவைக் கதிகலங்க வைத்திருக்கிறது. இறந்தவர்களை புதைக்க இடமில்லாமல் ஒரே இடத்தில் பலரைப் புதைக்கின்றனர். அமெரிக்காவுக்கு எச் சி கியூ மாத்திரை தேவை என்று இந்தியாவிடம் கேட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்தியா அதனை ஏற்றுமதி செய்தது.
இதுபற்றி குறிப்பிட்டு மெசேஜ் வெளியிட்ட நடிகர் பார்த்திபன், 'இந்தியாவின் மகத்துவத்தை உலகையும் நாள் வெகு விரைவில். இன்றைய மருத்துவத்தில் சக்கரமாய் சுழலும் உலகத்தின் உச்சத்தில் எனவே நமது பெருமைமிகு தேசியக் கொடியின் சக்கரத்திற்கு பதிலாக எச் சி கியூ என்ற மாத்திரையைப் பொருத்திப்பார்த்தேன் பிலோ யுவர் ஓன் டிரம்ப்பெட் என்று பெருமை பீத்திக்கொள்ள' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.