கொரோனா பாதித்த பாடகி வீட்டுக்குச் சீல் வைக்காதது ஏன்? பொதுமக்கள் கேள்வி..

இந்தி படப் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். 5 முறை டெஸ்ட் செய்தபோது அத்தனை முறையும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தனி அறையில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த அவர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினார்.

கனிகா அவரது வீட்டுக்கு வந்தது முதல் அப்பகுதி மக்கள் அவரை வித்தியாசமாகவே பார்த்தனர். கொரோனா பாதித்தவரென்றால் அவரது வீட்டை ஏன் சீல் வைக்கவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போலீஸுடன் வாக்குவாதம் செய்தனர். அதற்கு போஸீஸார், ' கனிகாவுக்கு வைரஸ் தாக்குதல் சரியாகி விட்டது. எனவே அவரது கட்டடத்துக்குச் சீல் வைக்கத் தேவை இல்லை' என்றனர்.

More News >>