டிவி நடிகை தற்கொலை? கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி விரக்தி..

வீட்டை விட்டு வெளியில் வந்தால் கொரோனா வைரஸ் தாக்கி இறக்க நேரிடும் என்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வீட்டிலேயே இருந்தால் வறுமை கொன்றுவிடும் என்பது போல் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஐதராபாத் எல்லராரெட்டி குடா பகுதியில் உள்ள என்ஜினியரிங் காலணியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 5வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் விஸ்வ சாந்தி. இவர் தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாகப் படப் பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வருமானம் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது வீட்டுக்குள் சென்றவர் வெளியிலேயே வரவில்லை. இது அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அப்பகுதியில் உள்ள எஸ் ஆர் நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு விஸ்வசாந்தி இறந்து கிடந்தது தெரிய வந்தது. பிணத்தைக் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். விஷ்வ சாந்தியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

More News >>