இந்தியாவில் கொரோனா பலி 273 ஆக அதிகரிப்பு.. பாதிப்பு 8 ஆயிரத்தைத் தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,356 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று வரை 7,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தெரிய வந்தது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,356 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 242ல் இருந்து 273 ஆக அதிகரித்துள்ளது. இது வரை கொரோனா பாதிப்பிலிருந்து 716 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1895 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. டெல்லியில் 1069, தமிழ்நாட்டில் 969, ராஜஸ்தானில் 700, மத்தியப் பிரதேசத்தில் 532, குஜராத்தில் 493, உத்தரப்பிரதேசம் 452 பேர் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

More News >>