புலி படத் தயாரிப்பாளர் 250 அரிசி மூட்டை உதவி

விஜய் நடித்த புலி, பிரபு நடித்த பந்தா பரமசிவம் போன்ற படங்களைத் தயாரித்தவர் பி. டி. செல்வகுமார். இவர் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவராகவும் இருக்கிறார். இதன் சார்பில் நற்பணிகள் செய்து வருகிறார்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரண்டரை லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் டி. ராஜேந்தர் தலைமையில் அனுப்பியதுடன் பட்டுக் கோட்டையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னிலையில் 108 பசுங்கன்றுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து திருச்சி வல்லத்தில் வைரமுத்து தலைமையில் 1008 ஆட்டுக் குட்டிகள் தரப்பட்டன. இப்போது கடந்த 4 நாட்களாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம், துரைப்பாக்கம் சுற்றி வசிக்கின்ற வட மாநில தொழிலாளர்கள், இருளர் இனத்தவர்கள், ஆந்திரா கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் பர்மா அகதிகள் என அனைவருக்கும் சுமார் 250 மூட்டைகள் அரிசி, மளிகை பொருட்கள், காய் கறிகள் மற்றும் முககவசங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

பி. டி. செல்வ குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலப்பை மாநில ஒருங்கிணைப்பாளர் வி.கே.வெங்கடேசன், கிராம அதிகாரி பொன்னுரை, சமூக ஆர்வலர் வேந்தரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.

More News >>