நயன்தாரா வில்லன் கஞ்சா பயன்படுத்தியதாகப் புகார்.. பதிலடி தந்த நடிகர்..

பாலிவுட் இயக்குனர் நடிகர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் எப்போதும் பாஜ அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பார். சமீபத்தில் கொரோனா ஊரடங்கு பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் புகை பிடித்தபடி பேசினார். அதைப் பார்த்த சிலர் ஊரடங்கில் இவருக்குப் புகைபிடிக்க எங்கிருந்து சிகெரட் கிடைத்தது. அது சிகரெட் இல்லை. சட்ட விரோதமான கஞ்சா. இது பற்றி மும்பை போலீசார் விசாரிக்க வேண்டும் எனப் புகார் தெரிவித்தனர்.

அதற்குப் பதிலடி தந்த அனுராக், 'ஆம், தயவு செய்து மும்பை போலீஸிடம் நான் புகையிலைதான் புகைக்கிறேன் என்பதை விசாரித்துத் தெளிவு படுத்துங்கள். பக்தாஸ் களும், எதிர்ப்பாளர்களும் அப்போதுதான் திருப்தி அடைவார்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>