இந்தியாவில் கொரோனா பலி 308 ஆக அதிகரிப்பு.. 9 ஆயிரம் பேருக்கு நோய்ப் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இது வரை 308 பேர் பலியாகியுள்ளனர். 856 பேர் குணமடைந்துள்ளனர். உலகை உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கொஞ்சம், கொஞ்சமாகப் பரவிக் கொண்டே இருக்கிறது. நேற்று புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9,152 ஆக உயர்ந்தது. இதில் 308 பேர் பலியாகியுள்ளனர். 856 பேர் குணமடைந்துள்ளனர்.அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 1985 பேர், டெல்லியில் 1154 பேர், தமிழ்நாட்டில் 1075, ராஜஸ்தான் 815, மத்தியப் பிரதேசம் 564, குஜராத் 538, தெலங்கானா 504 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

More News >>