கேரளா போலீஸுக்கு கமல் சல்யூட்..

கேரளாவில் கொரோனா பாதிப்பு மும்முரமாக உள்ளது. அரசும், போலீசாரும் மக்களை கொரோனா பிடியில் சிக்காமல் காக்கப் போராடி வருகின்றனர். டென்ஷனான பணியில் இருக்கும் போலீஸ்காரர்களை உற்சாகப்படுத்தக் கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் சொந்த குரலில் கொரோனா பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் டிஜிபி யும் பங்கேற்றிருக்கிறார். போலீசாரின் இந்த வீடியோவை பார்த்து அவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

'உங்களின் இந்த பங்களிப்பு பெரிய விஷயம். யுனிபார்முக்குள்ளும் பாடும் திறமை இருப்பது பாராட்டத்தக்கது. இதில் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருப்பது உணர்வுப் பூர்வமானது. அனைவருக்கும் எனது சல்யூட் ' எனத் தெரிவித்திருக்கிறார் கமல். இந்த பாராட்டுக்குக் கேரளா போலீசார், கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

More News >>