தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி..

கரூரில் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் இன்று பலியானார். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி 12 ஆக உயர்ந்துள்ளது.உலகை உலுக்கும் கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு நேற்று வரை 11 பேர் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலையில் அவர் உயிரிழந்தார். இதைக் கரூர் மாவட்டக் கலெக்டர் அன்பழகன் உறுதி செய்தார். அரசு விதிமுறைகளின்படி முதியவரின் உடல் தகனம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

More News >>