தமிழ்ப் புத்தாண்டு விழா.. மக்களுக்கு மோடி வாழ்த்து..

சித்திரைத் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சித்திரை மாதம் முதல் நாளான இன்று, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் இந்நாளில் காய்கனிகளை சாமிக்குப் படைத்து வணங்கிக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமிழில் போட்டுள்ள அந்த பதிவில், அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என்று கூறியுள்ளார்.

More News >>