ரஜினி வீட்டு முன் திருநங்கைகள் திடீர் போராட்டம்..

கொரோனா நிதி கேட்டு ரஜினி வீட்டுமுன் திருநங்கைகள் திடீர் போராட்டம் நடத்தினர். இது பற்றிக் கூறப்படுவதாவது:சில தினங்களுக்கு முன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 திருநங்கைகள் வந்தனர். திடீரென்று அவர்கள் வீட்டு முன் அமர்ந்து போராட ஆரம்பித்தனர். கொரோனா காலத்தில் எங்களுக்கு ரஜினி உதவவில்லை. அவர் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டனர். இந்த தகவல் ரஜினி மனைவி லதாவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் அவர்களுக்கு நிதி அளித்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்து.

More News >>