உயர்வு தாழ்வு பேசுவோரை ஓடச்செய்.. கமல்ஹாசன் வேண்டுகோள்..

தமிழ் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளும் ஆகும். இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:இந்தியத் திருநாடு யாரையும் மதத்தாலோ, மொழியிலோ, இனத்தாலோ, தொழிலிலோ பாகுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என்ற இவரது கனவுதான் அரசியல் சட்டமாகித் தனி மனித உரிமைகளின் கேடயமாக நிற்கிறது. அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செய்யும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே.. இவ்வாறு மக்கள் நீதி மய்யத்திலிருக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

More News >>