கொரோனா பாதித்த பகுதியில் கிருமிநாசினி தெளித்த எம் எல் ஏ நடிகை.. யூனிபார்ம் அணிந்து தடாலடி..
நகரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடமலை பகுதியில் நேற்று கொரோனா அறிகுறி ஒருவருக்குத் தென்பட்டது. இதை அறிந்த சட்ட மன்ற உறுப்பினர் உடனடியாக அங்குச் சென்றார். நகராட்சியில் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க முடிவெடுத்தனர். அந்த பணியில் ஈடுபடத் தயக்கம் காட்டிய பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கான உடை அணிந்து கிருமி நாசினியைத் தெளிக்க ஆரம்பித்தார் சட்ட மன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா. அதன் பிறகு அவருடன் சேர்ந்து பணியாளர்களும் ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.நடிகை ரோஜா தமிழில் செம்பருத்தி, சூரியன், உழைப்பாளி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர்.