கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே புது பட பூஜை.. ஜாஸ்மின் பட இயக்குனரின் அடுத்த படம்..

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய படத்தின் பூஜை மிக எளிமையாக ஜெகன் சாய் வீட்டிலேயே நடைபெற்றது. எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கியுள்ள ஜெகன்சாயின் இப்படத்தின் கதையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முன்னணி டெக்னிஷியன்ஸ் பணியாற்றுகிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

ஜெகன்சாய் ஏற்கனவே 'ஜாஸ்மின்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின் வெளியாகும்.புதிய படத்தின் எளிமையான பூஜையைப் பற்றி ஜெகன் சாய் கூறுகையில், "பிரமாண்டமாக இப்படத்தின் பூஜை நடத்தத் திட்டமிட்டிருந்தேன். அதே சமயம் எளிமையிலும் எண்ணற்ற வலிமை இருக்கிறது என்பார்கள். அந்த வலிமை மக்களை கொரோனாவில் இருந்தும் மீட்டெடுக்கும் தமிழ் சினிமாவும் விட்டதை எல்லாம் வென்றெடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

More News >>