வெளிநாட்டில் உள்ள இந்தியருக்கு ரஜினி சிறப்பு மெசேஜ்

வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு மிக இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. இதில் இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கில்லை. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் உறவினருக்கும், உங்க குடும்பத்தினருக்கும் சதா நேரமும் உங்க நினைப்புதான். உங்களை பத்திதான் சிந்தனை உங்களை பத்திதான் கவலை. நீங்க எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்தநாட்டு அரசு எந்தெந்த கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்களோ அதைத் தவறாமல் கடைப் பிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது தான் நீங்கள் உங்க உறவினர்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் தரும் இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழுங்கள் கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும். இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

More News >>