ரூ 25 கோடி சம்பளம் கேட்கும் ரஜினி நடிகை.. பாகுபலி ஹீரோவுடன் நடிக்க கண்டிஷன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோனே. இப்படம் எமோஷன் அனிமேஷன் கேப்ச்சர் படமாக உருவாக்கப்பட்டது. அந்த படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் நிறையப் படங்களில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு வந்தது.ஆனால் அதை ஏற்கவில்லை. இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாகுபலி படம் திரைக்கு வந்தபோது இந்தியா முழுவதும் அப்படம் வரவேற்பு பெற்றது. அதில் ஹீரோவாக நடித்த பிரபாஸுடன் ஜோடியாக நடிக்க தீபிகா உள்படப் பல பாலிவுட் நடிகைகள் விருப்பம் தெரிவித்தனர். பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தீபிகாவைப் படக்குழு அணுகியது. ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்ததால் கேட்டதும் உடனே கால்ஷீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 20 முதல் 25 கோடி ரூபாய் சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என்றாராம் தீபிகா. சம்பளத்தைக் கேட்டு மலைத்துப்போனவர்கள் கப்சிப் என்று திரும்பினர். ஆனால் தீபிகாவுக்கு அவ்வளவு சம்பளம் தருவது வீணில்லை என ஒரு தரப்பு கூறிவருகிறதாம்.

பிரபாஸ், தீபிகா ஜோடி என்றதும் அப்படத்தின் விற்பனை பல நூறு கோடியைத் தாண்டும். எனவே தீபிகாவின் சம்பளம் ஒரு பொருட்டல்ல என்கிறார்களாம்.

More News >>