கொரோனா பற்றி வடிவேலு உருக்கமான பாடல்.. வைரஸாய் வந்து பாடம் புகட்டிவிட்டாய்..

நடிகர் வடிவேலு கடந்த ஒரு வருடமாக புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருக்கிறார். அதேசமயம் ஏற்கெனவே நடித்த படங்கள் வாயிலாக மீம்ஸ் மூலம் இணைய தளத்திலும் டிவியிலும் தோன்றி தினம் தினம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சமீபத்தில் அவர் டிவிட்டரில் இணைந்து ரசிகர்களைத் தொடர்பு கொண்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி உருக்கமான பாடலை பாடி டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதில்,

'காடுகளை அழித்தோம் மண்வளம் தொலைத்தோம் நீர் வளம் முடித்தோம் நம் வாழ்க்கையைத் தொலைத்தோம் வைரஸாய் வந்தே நீ பாடம் புகட்டிவிட்டாய் இயற்கையை மதிக்கின்றோம் இதோடு விட்டுவிடு' என மனம் உருகப் பாடியிருக்கிறார்வடிவேலுவின் இந்த பாடல் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/VadiveluOffl/status/1250436107440771072?s=08

More News >>