ஊரடங்கை மீறியதால் பறிமுதலான வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு..

ஊரடங்கு விதிகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் திருப்பி கொடுக்கவுள்ளனர். வாகன உரிமையாளர்கள் ஆவணம் காட்டி, அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அவற்றைத் திருப்பிக் கொடுக்க காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஊரடங்கு நடைமுறையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. எனவே, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் நாளை முதல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 பேருக்கு என்று முறை வைத்து வாகனங்கள் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் அதிகப்படியாக ஒரு மணி வரையும் ஒப்படைக்கப்படும். இந்த நேரத்தில் சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்.

கடந்த மாதம் 24ம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி, வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தில் வந்து வாகனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தகவல் அனுப்பப்படும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். வாகன உரிமையாளர்கள் இதற்காக டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், கடந்த 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>