மகனை காண காத்திருக்கும் ஹீரோ.. புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்..

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். ஆனால் மகன் ஆரியன் நினைவாகவே எப்போதும் இருக்கிறார். தமிழ்ப் புத்தாண்டில் தனது புதிய படம் மோகன்தாஸ் பட டைட்டிலை அறிவித்ததுடன் அப்படத்தில் தனது தோற்றம் எப்படியிருக்கும் என்ற ஸ்டில்லும் வெளியிட்டார். திடீரென்று மகன் நினைவு வந்துவிட டிவிட்டரில் பாசத்தைக் கொட்டினார். 'என் மகன் ஆர்யனை காணக் காத்திருக்கிறேன். எல்லாம் சரியானதும் சந்திப்பேன். லாக்டவுனில் அவன் வீட்டில் இருக்கிறான். மனிதாபிமானத்திற்காக பிரார்த்தனை செய்வோம். எல்லோரும் வீட்டில் பத்திரமாக இருங்கள்' என தெரிவித்திருக்கிறார்.

More News >>