நடிகர் சங்கத்துக்கு லாரன்ஸ் உதவி.. நடிகர் உதயா தகவல்..

இனி எல்லாம் சுகமே, திருநெல்வேலி, ரா ரா, தலைவா, உத்தரவு மகாராஜா போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் உதயா. இவர் முன்னாள் நடிகர் சங்க நிர்வாகி. அவர் கூறியதாவது :கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும், நடனக் கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் மூன்று கோடியை வாரி வழங்கியது மட்டுமல்லாமல். இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நிதி உதவி வழங்கிய வள்ளல். எங்கள் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.

பெப்சி அமைப்பில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அங்கம் இல்லாததால் அவர்களுக்குத் தான் செய்த உதவிப் போய்ச் சேரவில்லை என்று அறிந்து மனம் உருகி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நலிந்த நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு ரூபாய் 25 லட்சத்தை அளித்து மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்குப் பணம் மட்டும் இருந்தால் போதாது கொடுக்கும் மனம் இருக்க வேண்டும். திரைத்துறையைச் சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த ஒளி விளக்கு. கொடுத்துச் சிவந்த கை, எங்கள் கருப்பு வைரம். ராகவா லாரன்ஸ் நீடூழி வாழ்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு உதயா கூறி உள்ளார்.

More News >>