உணவு தானியம் அளிக்கும் காஜல் அகர்வால்.. கொரோனா நிவாரண நிதியும் அளித்தார்..

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு காரணமாகத் திரைத்துறை பாதிக்கப்பட்டிருப்பதுடன், வேலை இல்லாமல் ஏழை மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் ஊரடங்கில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்.மேலும் கொரோனா வைரஸ் நிவாரண தொகையாகத் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.

மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளைத் தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

More News >>