நெருப்பு பீடாவை வாயில்போட்ட அருண் விஜய்.. நரகவேதனையுடன் அதிர்ச்சி..

நடிகர் அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கும் ஏவி 31 படத்தில் நடித்து வருகிறார். ரெஜினா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வந்தது. கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வீட்டிலிருக்கும் அருண் விஜய் தனது உடலைப் பிட்டாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சிகளும். ஸ்டண்ட் பயிற்சிகளும் செய்து வருகிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டும் வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. குபுகுபு என எரியும் ஒரு நெருப்பை வாயில் போட்டு மெல்கிறார்.

டெல்லியில் ஏவி 31 படப்பிடிப்பு நடந்தபோது ஓய்வு நேரத்தில் படக்குழுவினருடன் ஊரைச் சுற்றிப்பார்க்கச் சென்ற அருண் விஜய் அப்பகுதியில் உள்ள பீடா கடைக்கு பீடா சாப்பிடச் சென்றார். கடைக்காரர் , சுட்ட பீடா வேண்டுமா. சுடாத பீடா வேண்டுமா என்று கேட்க, அது என்ன சுட்ட பீடா? என்று கேட்ட அருண் விஜய் சுட்ட பீடாவையே கொடுங்கள்” என்றார். உடனே கடைக்காரர் வெற்றிலையில் பீடா தயாரித்து திடீரென்று அதில் நெருப்பை வைக்க பீடா குபுகுபுவென கற்பூரம்போல் எரியத் தொடங்கியது. அதைக்கண்டு ஷாக் ஆனார் அருண். அடுத்த நொடியில் எரியும் பீடவை கையில் எடுத்த கடைக்காரர் வாயை திறங்க என்று சொல்லி அதை அப்படியே அருண் விஜய் வாயில் போட்டார். வாயில் சுடு தகதகவென சுட அதை மென்றபடி அதிர்ந்து நின்றார் அருண் விஜய். இந்த காட்சியை வீடியோவாக பகிர்ந்த அருண் விஜய். இதுவொரு நரக வேதனை அனுபவம் என்று கூறியுள்ளார்.

More News >>