டெல்லியில் கொரோனா பலி 42 ஆக அதிகரிப்பு..

டெல்லியில் 1767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்க்கு 42 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று வரை 14,378 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 480 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,323 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

டெல்லியில் இன்று காலை வரை 1767 பேருக்கு கொரோனா பாதித்துள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார். அவர் மேலும் கூறுகையில், டெல்லியில் கொரோனாவுக்கு இது வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா பாதித்த 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர், வென்டிலேட்டரில் உள்ளனர் என்றார்.

More News >>